துபாய் – கோழிக்கோடு சென்ற விமானம் கோவையில் அவசரமாக தரையிறக்கம்..!!

4 months ago 20

கோவை: துபாயில் இருந்து கோழிக்கோடு சென்ற விமானம் கோவை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. கோழிக்கோட்டில் நிலவிய மோசமான வானிலை காரணமாக கோவையில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. துபாயில் இருந்து கோழிக்கோடு சென்ற ஃபிளை துபாய் விமானத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். மோசமான வானிலையால் தரையிறங்க முடியாமல் அரைமணி நேரம் விமானம் வானில் வட்டமடித்தது. கோழிக்கோட்டில் தரையிறங்க முடியாமல் கோவை விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது. வானிலை சீரான பிறகு மீண்டும் கோழிக்கோடு செல்லும் என விமான நிலைய நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

 

The post துபாய் – கோழிக்கோடு சென்ற விமானம் கோவையில் அவசரமாக தரையிறக்கம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article