சென்னை: பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் சட்டப் பிரிவுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அரசு பதில் அளிக்க அவகாசம் தராமல் விசாரணை நடத்துவது முறையற்ற செயல், நியாயமானது இல்லை என தமிழ்நாடு அரசுத்தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
The post துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தொடர்பான அரசின் சட்டப் பிரிவுகளுக்கு இடைக்காலத் தடை appeared first on Dinakaran.