“துணை முதல்வருக்கு பேனர்கள் வேண்டாம்” - திமுகவினருக்கு அமைச்சர் பொன்முடி அறிவுரை

3 months ago 13

விழுப்புரம்: “விழுப்புரம் மாவட்டத்துக்கு வருகை தரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று, வழிகளில் எங்கேயும் கட் அவுட்டுகள், பேனர்கள் கட்ட வேண்டாம். கட்சி கொடி மட்டுமே கட்ட வேண்டும்” என்று திமுகவினருக்கு வனத்துறை அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தி உள்ளார்.

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் திண்டிவனத்தில் இன்று (நவ.2) நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட அவை தலைவரான செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் மஸ்தான் தலைமையேற்றார். இக்கூட்டத்தில் கழகத் துணைப் பொதுச் செயலாளரும், வனத்துறை அமைச்சருமான .பொன்முடி கலந்து கொண்டு பேசியது: “வருகிற 5 மற்றும் 6-ம் தேதியில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ளார். அவருக்கு திண்டிவனத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.

Read Entire Article