சென்னை: சென்னையில் ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் கைதான எஸ்.எஸ்.ஐ. சன்னி லாய்டு மேலும் ஒரு வழிப்பறியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீஸ் காவலில் எடுத்த நடத்தப்பட்ட விசாரணையில் எஸ்.எஸ்.ஐ. சன்னி லாய்டு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆயிரம்விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த டிச.11ம் தேதி ராயபுரத்தைச் சேர்ந்த தமீன் அன்சாரி என்பவரிடம் ரூ.20 லட்சத்தை வழிப்பறி செய்ததாக எஸ்.எஸ்.ஐ. சன்னி லாய்டு, வருமானவரி அதிகாரிகள் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
The post சென்னையில் ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் கைதான எஸ்.எஸ்.ஐ. சன்னி லாய்டு மேலும் ஒரு வழிப்பறியில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலம் appeared first on Dinakaran.