தீபாவளியன்றும் எகிறிய தங்கம் விலை: சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.59,640க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

6 months ago 22

சென்னை: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.59,640க்கு விற்பனை செய்யப்படுகிறது.  தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஒருநாள் உயர்வதும், மறுநாள் குறைவதுமாக ஒரு நிலையற்ற தன்மையிலேயே பயணித்து கொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வரும் சூழலில், இன்று தீபாவளி அன்று மீண்டும் சற்று அதிகரித்துள்ளது நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நேற்று முன்தினம் கிராம் ரூ.7,315-க்கும், ஒரு பவுன் ரூ.58,520-க்கும் விற்பனை ஆனது.தங்கம் விலை நேற்று சற்று அதிகரித்தது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.59 ஆயிரத்து 520க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.65 அதிகரித்து ரூ.7,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.59,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7,455-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.109-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post தீபாவளியன்றும் எகிறிய தங்கம் விலை: சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.59,640க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article