திருவேங்கடம் அருகே ஜாமீனில் வெளிவந்தவர் பைக் விபத்தில் சாவு

2 months ago 7

திருேவங்கடம், மார்ச் 4: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் அடுத்துள்ள ஆலடிப்பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகன் காளிராஜ்(40). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில வாரங்களுக்கு முன் பக்கத்து வீட்டு பெண்ணை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த காளிராஜ் கடந்த 21-ந் தேதி சங்கரன்கோவில் நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டுவிட்டு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். ஆலடிப்பட்டி ஊருக்குள் வந்தபோது எதிர் பாராதவிதமாக பைக் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த காளிராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் ேசர்க்கப்பட்டார். இங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் காளிராஜ் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து திருவேங்கடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருவேங்கடம் அருகே ஜாமீனில் வெளிவந்தவர் பைக் விபத்தில் சாவு appeared first on Dinakaran.

Read Entire Article