திருவாரூர், பிப்.6: திருவாரூரில் நேற்று நடைபெற்ற மாற்றுதிறனாளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் மோகனசந்திரன் வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ந் தேதியை அனைத்து நாடுகளும் மாற்றுத்திறனாளிகள் நாளாக அனுசரித்து வருகிறது. இதனையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு நேற்று மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு 12 வயது வரை உள்ள சிறார்களுக்கு பலு£ன் ஊதுதல் மற்றும் பாட்டிலில் நீர் நிரப்பும் போட்டியும், 15 வயது வரை உள்ளவர்களுக்கு 100 மீ ஓட்டபந்தயம், 15 முதல் 17 வயது வரை உள்ளவர்களுக்கு நீளம் தாண்டுதல் போட்டியும், 17 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு குண்டு எறிதல் போட்டியும் நடைபெற்றது.
இதேபோல் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோருக்கான போட்டிகள் 12 வயது முதல் 14 வயது வரையுள்ள சிறார்களுக்கு 100மீ ஓட்ட பந்தயம் மற்றும் நின்று நீளம் தாண்டுதல் போட்டியும், 15 வயது முதல் 16 வயது வரை உள்ளவர்களுக்கு குண்டு எறிதல் போட்டியும், 17 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வட்டத் தட்டு எறிதல் மற்றும் 100 மீ ஓட்டபந்தயம் போட்டியும், கடுமையாக உடல் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டு உபகரணங்கள் உதவியுடன் நடக்கும் 12 வயது முதல் 14 வயது வரையுள்ளவர்களுக்கு 50மீ நடைப்போட்டி – மற்றும் 15 முதல் 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு 100 மீ நடைபோட்டி மற்றும் 17 வயது மேற்பட்டவர்களுக்கு சக்கர நாற்காலி போட்டி மற்றும் 75 மீ ஓட்டப்போட்டியும் நடைபெற்றன. மேலும் கைகள் பாதிக்கப்பட்ட 14 வயது வரையுள்ள சிறார்களுக்கு 50 மீ ஓட்டப்பந்தயமும், 15 வயது முதல் 17 வயது வரை உள்ளவர்களுக்கு 100 மீ ஓட்டப்பந்தயமும்- மற்றும் 17 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 200 மீ ஓட்டப்பந்தயமும், மனவளர்ச்சிக்குன்றியோர்களில் 12 வயது வரை உள்ளவர்களுக்கு பந்து சேகரித்தல் மற்றும் 100 மீ ஓட்டப்பந்தயம் போட்டிகளும், 12 முதல் 14 வயது வரை நின்று நீளம் தாண்டுதல் போட்டியும், 15 முதல் 17 வயதுடையவர்களுக்கு ஓடி நீளம் தாண்டுதல் போட்டியும், 17 வயதிற்கு மேற்ப்பட்டவர்களுக்கு 100 மீ ஓட்டபந்தயமும் நடைபெற்றது.
இந்நிலையில் இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இறுதியாக வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் மோகனசந்திரன் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ பூண்டிகலைவணான், மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் புவனா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post திருவாரூரில் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள்: வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கலெக்டர் பாராட்டு appeared first on Dinakaran.