திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் வருகின்ற 27ம்தேதி மாசி மாத தெப்ப உற்சவம் துவங்குகிறது

3 hours ago 2

திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் மாசி மாத தெப்ப உற்சவம் வரும் 27 ம் தேதி துவங்கி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறுகிறது. திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவப் பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற திருத்தலமாகும். இந்த திருக்கோயிலில் இந்தாண்டுக்கான மாசி மாத தெப்ப உற்சவம் வரும் 27ம்தேதி தொடங்கி மார்ச் 1ம் தேதி வரை 3 நாட்ளுக்கு நடைபெறுகிறது. இந்த விழாவை முன்னிட்டு தினமும் கோவிலில் இருந்து வைத்திய வீரராகவ பெருமாள் தேவி, பூ தேவி சமேதராய் குளத்திற்கு புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அங்கு சமேதராய் வீற்றிருக்கும் வீரராகவருக்கு சிறப்பு பூஜை மற்றும் தீப ஆராதனை நடத்தப்பட்டு மின் அலங்காரம் செய்யப்பட்ட தெப்பத்தில் 3 முறை உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தெப்பத் திருவிழாவுக்கு திருவள்ளூர் மட்டுமல்லாது சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகைத்தந்து சாமி தரிசனம் செய்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோயில் கௌர ஏஜென்ட்  ரங்கநாதன், மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.சம்பத், கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

The post திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் வருகின்ற 27ம்தேதி மாசி மாத தெப்ப உற்சவம் துவங்குகிறது appeared first on Dinakaran.

Read Entire Article