திருவள்ளூர்: பள்ளி வேன் மீது கார் மோதி விபத்து

7 hours ago 1

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் இன்று மாலை மாணவ, மாணவியரை ஏற்றிக்கொண்டு பள்ளி வேன் சென்றுகொண்டிருந்தது. அப்போது, சாலையில் வேகமாக வந்த கார் முன்னே சென்றுகொண்டிருந்த பள்ளி வேன் மீது மோதியது.

இந்த விபத்தில் கார் தீப்பற்றி எரிந்தது. துரிதமாக செயல்பட்ட அங்கிருந்தவர்கள் வேனில் இருந்த மாணவ-மாணவியரை பத்திரமாக மீட்டனர். மேலும், காரில் இருந்தவர்களும் மீட்கப்பட்டனர். காரில் பற்றி எரிந்த தீயையும் அணைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article