திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

3 weeks ago 7

சென்னை: திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் அன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திருவள்ளுவர் தினமான வரும் 15ம் தேதி(புதன்கிழமை) மற்றும் குடியரசு தினமான வரும் 26ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தினங்களில் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை(கடைகள் மற்றும் பார்கள்) விதிகள், தமிழ்நாடு மதுபானம்(உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் ஆகியவைகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக்(எப்எல்1) மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், எப்எல்2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், எப்எல்3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் எப்எல்3(ஏ), எப்எல்3(ஏஏ) மற்றும் எப்எல்11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்படும். அன்றைய தினம் வரும் 15ம் தேதி திருவள்ளூர் தினம் மற்றும் வரும் 26ம் தேதி குடியரசு தினம் ஆகிய தினங்களில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. தவறினால், மதுபான விற்பனை விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

 

The post திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை appeared first on Dinakaran.

Read Entire Article