திருவனந்தபுரம், பிப். 6: திருவனந்தபுரம் அருகே சாரச்சிரை பகுதியை சேர்ந்தவர் தாமஸ் (63). பயிற்சி மையத்தில் பியானோ கற்றுக் கொடுத்து வருகிறார். இவரிடம் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பியானோ கற்று வந்தனர். இதில் 3 மாணவிகளுக்கு தாமஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக மியூசியம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் தாமஸ் தன்னிடம் படித்த மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து தாமசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post திருவனந்தபுரத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை பியானோ ஆசிரியர் கைது appeared first on Dinakaran.