திருவண்ணாமலையில் டிச.21ம் தேதி பாமக உழவர் பேரியக்க மாநில மாநாடு: ராமதாஸ் அறிவிப்பு

2 months ago 10

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஒட்டுமொத்த உலகிற்கும் உணவு படைக்கும் கடவுளர்களான உழவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு வரும் டிசம்பர் 21ம் தேதி (சனிக்கிழமை) திருவண்ணாமலை சந்தைமேடு பகுதில் நடைபெற உள்ளது.

பாமகவின் இணை அமைப்பான தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் சார்பில் டிசம்பர் 21ல் மாலை 4 மணிக்கு தொடங்கும் மாநாட்டில் தமிழ்நாடு உழவர் பேரியக்க நிறுவனரான நான், பாமக தலைவர் அன்புமணி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி மற்றும் பல்வேறு உழவர் அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் உரை நிகழ்த்துகின்றனர். மாநாட்டு பணிகளின் ஒருங்கிணைப்பாளர்களாக தமிழ்நாடு உழவர் பேரியக்க தலைவர் கோ.ஆலயமணி, செயலாளர் வேலுச்சாமி நியமிக்கப்பட்டிருக்கின்றனர். மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் குடும்பத்துடன் பங்கேற்க அழைக்கிறேன்.

 

The post திருவண்ணாமலையில் டிச.21ம் தேதி பாமக உழவர் பேரியக்க மாநில மாநாடு: ராமதாஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article