“திருமாவளவன், ஆதவ் அர்ஜுனா நாடகம் நடத்துகிறார்களா?” - அண்ணாமலை கேள்வி

4 months ago 15

கோவை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் ஞாயிற்றுக்கிழமை (டிச.8) மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஆனந்த் டெல்டும்பே என்ற ‘அர்பன் நக்சல்’ முக்கிய விருந்தினராகப் பங்கேற்றுள்ளார்.

அவரது தம்பி மிலிந்த் 2021-ல் மகாராஷ்டிராவில் நக்சல்களுடன் ஏற்பட்ட சண்டையின்போது சுட்டுக் கொல்லப்பட்டவர். தமிழகத்தில் நக்சல் ஆதிக்கம் கொண்டு வர முயற்சிக்கிறார்களா? லாட்டரி அதிபரின் மருமகன் ஆதவ் அர்ஜுனா முன்பு சபரீசனுக்கு நெருக்கமாக இருந்தவர். தற்போது விசிகவுக்கு நிதி அளிப்பவராக இருக்கிறார். அவர், புத்தக வெளியிட்டு விழாவில் பாஜக குறித்துப் பேசியுள்ளார். இந்த விழாவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் செல்லவில்லை. துணைப் பொதுச் செயலாளர் சென்றுள்ளார்.

Read Entire Article