புதுக்கோட்டை: திருமயம் அருகே காரும், சரக்கு ஆட்டோவும் நேற்று மோதிக் கொண்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் காவிரி நகரைச் சேர்ந்தவர் செந்தமிழ்ச்செல்வன்(65). இவர், மனைவி அருணா(60), மருமகள் ரம்யா(45), பேரக் குழந்தைகள் குழலினி(10), மகிழினி(4) ஆகியோருடன் நேற்று காரைக்குடிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். காரை செந்தமிழச்செல்வன் ஓட்டினார்.