சென்னை: மும்மொழி கொள்கை விவகாரம் பூதாகரமாக வெடித்து வரும் நிலையில், “உங்களுக்கும் சேர்த்து தான் இந்த தமிழ்நாடு போராடுகிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் அண்ணாமலை” என காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் காட்டமாக தெரிவித்துள்ளார்.
மும்மொழி கொள்கை விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும், காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் இடையே வார்த்தை மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்நிலையில், இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “தமிழக முதல்வர் தொடங்கி, திமுக மற்றும் ஒட்டு மொத்த இந்தி கூட்டணிக் கட்சி எம்பிக்கள் அனைவருமே பொய் சொல்வதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.