கிருஷ்ணகிரி, பிப்.22: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் மேல்கொள்ளப்பட்டியை சேர்ந்தவர் தாமோதரன்(40). இவரது மனைவி லட்சுமிதேவி (24). தாமோதரன் கடந்த 10 நாட்களுக்கு முன் 2வதாக லட்சுமிதேவியை, திருமணம் செய்து கொண்டார். லட்சுமிதேவி கிருஷ்ணகிரி அடுத்த பவளம் கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 19ம் தேதி கல்லூரிக்கு சென்றவர் மதியம் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி லட்சுமிதேவியின் கணவர் தாமோதரன், கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, மாயமான லட்சுமிதேவியை தேடி வருகின்றனர்.
The post திருமணமான 10 நாளில் புதுப்பெண் திடீர் மாயம் appeared first on Dinakaran.