திருப்பூரில் நள்ளிரவில் டீ கேட்ட பேக்கரி ஊழியர்களை சரமாரியாக தாக்கிய போதை இளைஞர்கள் 5 பேர் கைது

2 months ago 10
திருப்பூர் வீரபாண்டி பகுதியில் உள்ள பேக்கரிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த இளைஞர்கள் 5 பேர் ஊழியர்களுடன் தகராறு செய்து அவர்களை தாக்கும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பொன்ராஜ் என்பவரின் பேக்கரிக்கு வந்த இளைஞர்கள் தின்பண்டங்களை எடுத்து சாப்பிட்டுவிட்டு டீ கேட்டதாகவும், டீ இல்லை என கூறியதால் வாக்குவாதம் செய்து, தின்பண்டங்களுக்கும் பணம் கொடுக்க மறுத்து தாக்கியதாகவும் கடை ஊழியர்கள் தெரிவித்தனர். அப்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த போலீசார் 5 இளைஞர்களையும் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றதுடன், அவர்கள் வந்த இரண்டு டூவீலர்களையும் பறிமுதல் செய்தனர்.
Read Entire Article