திருப்பூரில் அனுமதியின்றி கட்டப்பட்ட பள்ளியின் கட்டுமானங்களை இடிக்க ஐகோர்ட் ஆணை!!

1 week ago 5

சென்னை: திருப்பூரில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள பள்ளியின் கட்டுமானங்களை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாராபுரம் தனியார் பள்ளியில் திட்ட அனுமதியை மீறி கட்டப்பட்ட கட்டுமானங்களை இடிக்க உத்தரவிடக் கோரி தாராபுரத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டுமானங்களை இடிக்க அவகாசம் வழங்க வேண்டும் என பள்ளி நிர்வாகம் கோரிக்கை விடுத்த நிலையில், கோரிக்கையை ஏற்று அடுத்த கல்வி ஆண்டு துவங்கும் முன் கட்டடங்களை இடிக்கும் பணிகளை முடிக்க வேண்டும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

The post திருப்பூரில் அனுமதியின்றி கட்டப்பட்ட பள்ளியின் கட்டுமானங்களை இடிக்க ஐகோர்ட் ஆணை!! appeared first on Dinakaran.

Read Entire Article