திருப்புத்தூர் அருகே புல்லட் திருடிய 2 பேர் கைது

2 months ago 14

திருப்புத்தூர், டிச. 19: திருப்பத்தூர் அருகே நெற்குப்பை பகுதியைச் சேர்ந்தவர் நித்தியா. இவர் வீட்டின் முன் கடந்த டிச.15ம் தேதி இரவு இவரது தம்பியின் புல்லட் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து. காலையில் பார்க்கும்போது புல்லட்டை காணவில்லை. இதுகுறித்த புகாரில் நெற்குப்பை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், நேற்று புல்லட் பொன்னமராவதியில் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து பொன்னமராவதி சென்ற போலீசார் புல்லட்டை வைத்திருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் பொன்னமராவதி இந்திரா நகரைச் சேர்ந்த ராமசாமி மகன் மணிகண்டன் (28), ராமன் மகன் சுப்ரமணியன் (36) என்பது தெரியவந்தது. இவர்கள் புல்லட்டை திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post திருப்புத்தூர் அருகே புல்லட் திருடிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article