திருப்பரங்குன்றம் விவகாரம் | ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி பதவி விலக அண்ணாமலை வலியுறுத்தல்

2 weeks ago 3

சென்னை: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலை அசுத்தப்படுத்திய ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி, உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இரண்டு நாட்களுக்கு முன்பாக, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலைக்கு, தனது ஆதரவாளர்களுடன் சென்ற, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, இந்து மக்கள் புனிதமாகக் கருதும் திருப்பரங்குன்றம் மலையில் அமர்ந்து, அவருடன் வந்தவர்கள் அசைவ உணவு உண்ணும் புகைப்படத்தை, அவரது சமூக வலைத்தளப் பக்கத்திலேயே பகிர்ந்திருந்தார். பொதுமக்கள் மற்றும் பாஜக சகோதர சகோதரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தவுடன், தற்போது அசைவ உணவு உண்டதை நிரூபித்தால், தனது பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்கிறார்.

Read Entire Article