மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் முற்றிலும் அரசியல் இருக்கிறது என மதுரையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டினார்.
மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் தேமுதிக மாவட்ட நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார்.