சென்னை: மத்திய இணையமைச்சரும், பாஜ தலைவர்களில் ஒருவருமான எல்.முருகன் வெளியிட்ட அறிக்கை: இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலை மீது அசைவ உணவு சாப்பிட்டவர்களை அரசு தடுக்கவில்லை. காவல் துறையும் இந்து அமைப்பினர் போராடுவதால் மதக் கலவரம் உருவாகிவிடும் என்று கூறி, தமிழகம் முழுவதும் உள்ள இந்து அமைப்பினரை கைது செய்து வருகிறது. இது சர்வாதிகாரத்தின் உச்சம்.
காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும், திருப்பரங்குன்றத்திற்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது எப்படி நியாயமாகும்?. உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி, ஜனநாயக ரீதியில் போராடுவதற்கான அனுமதி வழங்குவதுடன், கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இந்து முன்னணி கட்சியின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியன் மற்றும் பாஜ தலைவர்களை கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
The post திருப்பரங்குன்றம் பிரச்னையில் கைது செய்யப்பட்டுள்ள பா.ஜ நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும்: ஒன்றிய இணையமைச்சர் அறிக்கை appeared first on Dinakaran.