மதுரை: திருப்பரங்குன்றத்தில் பிப். 4-ல் இந்து அமைப்பினர் கூடுவதை தடுக்கவும், திருப்பரங்குன்றத்தை கலவரக் குன்றமாக மாற்ற முயற்சிப்போர் மீது நடவடிக்கை எடுக்கவும் மதுரை மத நல்லிணக்க அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மதுரையில் மத நல்லிணக்க அமைப்பு சார்பில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரை திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக ஏற்கெனவே நீதிமன்ற உத்தரவுகள் உள்ள நிலையில், திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு வதந்திகளை பரப்பி வருகின்றன.