திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் பழுதாகி நின்ற அரசு பஸ்சை தள்ளிய பயணிகள்

4 hours ago 3

*வீடியோ வைரல்

திருப்பத்தூர் : திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் நேற்று பழுதாகி நின்ற அரசு பஸ்சை பயணிகள் தள்ளி ஸ்டார்ட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் அமாவாசையன்று நடக்கும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்ள திருப்பத்தூர், வேலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம்.

அதன்படி, சித்திரை மாத அமாவாசையான நேற்று மேல்மலையனூருக்கு செல்ல திருப்பத்தூர் புதிய பஸ் நிலையத்தில் ஏராளமான மக்கள் வந்தனர். பின்னர், அங்கு தயார் நிலையில் இருந்த அரசு பஸ்சில் ஏறி காத்திருந்தனர். ஆனால், பஸ் புறப்பட்டபோது திடீரென பழுதாகி நின்றது.

இதையடுத்து, பஸ்சில் இருந்த பயணிகள் 10க்கும் மேற்பட்டோர் கீழே இறங்கி நடத்துனருடன் சேர்ந்து பஸ்சை தள்ளிச்சென்று ஸ்டார்ட் செய்தனர். தற்போது இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

The post திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் பழுதாகி நின்ற அரசு பஸ்சை தள்ளிய பயணிகள் appeared first on Dinakaran.

Read Entire Article