மேட்டூர் / சென்னை: திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மேச்சேரி பெண்ணுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், மல்லிகா குடும்பத்தினருக்கு அனைத்துக் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மேச்சேரியை அடுத்த தாசனூர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா (55). இவரது கணவர் கிருஷ்ணன் (58), மேச்சேரி பேரூராட்சியில் தற்காலிக டேங்க் ஆபரேட்டராகப் பணிபுரிகிறார்.