திருப்பதியில் உள்ள இஸ்கான் கோயிலுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்..!!

3 months ago 12

ஆந்திரா: திருப்பதியில் உள்ள இஸ்கான் கோயிலுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. திருப்பதி நகரில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு கடந்த வாரத்தில் 3 முறை இரவு நேரங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஹோட்டல் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் அது வதந்தி என தெரியவந்தது.

இந்த நிலையில், நேற்று இரவு திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள இஸ்கான் கோயிலுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களை அழைத்து சோதனை நடத்திய போது அங்கு வெடிகுண்டு இல்லை என்பது தெரியவந்தது.

வெடிகுண்டு மிரட்டல் தொடர்கதையாகி வரும் நிலையில் தீவிரவாதிகளின் திட்டங்கள் என்னவென்று தெரியாமல் போலீசார் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனால் தனி அறைகளில் தங்கி இருக்கும் பக்தர்களும் குழப்பத்தில் உள்ளனர்.மேலும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் இது குறித்து புலனாய்வு துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post திருப்பதியில் உள்ள இஸ்கான் கோயிலுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்..!! appeared first on Dinakaran.

Read Entire Article