திருப்பங்கள் தரும் திருவேங்கடநாதபுரம்

4 hours ago 3

*தாமிரபரணி கரையில் ஒரே பகுதியில் மேல் திருப்பதி, கீழ் திருப்பதி மற்றும் காளகஸ்தியை போன்ற ஆலயமுள்ள தலமே திருவேங்கடநாதபுரம்.

*வியாச மாமுனிவரின் சீடரான பைலர், தாமிரபரணி கரையில் ஒரு கோடி மலரால் பூஜித்து, அர்ச்சனை செய்த இடம் ஸ்ரீநிவாச தீர்த்த கட்டம்.

*இத்தலத்தில் உள்ள கீழ் திருப்பதி வரதராஜப் பெருமாள், பிருகு முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். இவர் சதுர் புஜத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சியளிக்கிறார்.

*வெங்கடப்ப நாயக்கர் ஸ்ரீநிவாசர் தீர்த்த கட்டத்தில் மூழ்கி வணங்கினார். அசரீரியாக பெருமாள் ‘ஆயிரம் குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கு’ என்றார். நாயக்கரும் அன்னதானம் வழங்கி குழந்தைப் பேறு பெற்றார். நன்றிக்கடனாக, கோயிலைக் கட்டினார்; அந்த தலத்திற்கு வேங்கடநாதபுரம் என்று பெயரும் வைத்தார்.

*பெருமாளின் வலக்கரம் ஒன்றில் சக்கரமும், மற்றொரு கரத்தில் தனரேகையும் ஓடுகிறது. இடதுபுறக் கரங்களில் ஒன்றில் சங்கும், மற்றொன்றில் கதாயுதமும் காணப்படுகின்றன.

*மூலவர் திருவேங்கடமுடையார் ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் அருள்கிறார்.

*பெருமாளின் கையில் தனரேகை ஓடும் காரணத்தால் இதை சுக்கிர தலம் என்பர்.

*கோத பரமேஸ்வரரும், அன்னை சிவகாமியும் சர்ப்ப தோஷம், நாகதோஷம் நீக்குகின்றனர். தடைப்பட்ட திருமணங்கள் விரைவில் நடக்கின்றன.

*திருப்பதி ஏழுமலையானுக்கு செலுத்த வேண்டிய நேர்ச்சையை தென் திருப் பதியான திருவேங்கடநாதபுரத்தில் செலுத்தலாம். ஆனால் இங்கு நேர்ந்து கொள்ளும் நேர்ச்சையை திருப்பதியில் செலுத்த முடியாது.

*திருவேங்கடநாதபுரத்துக்கு திருவணாங்கோயில், சங்காணி, குன்னத்தூர் என்ற சுவேதா மலை, சாலிவாடிஸ்வரம், வைப்பராச்சியம் ஆகிய பெயர்கள் உண்டு. தற்போது இத்தலத்தை திருநாங்கோயில் மற்றும் மேலத் திருவேங்கடநாதபுரம் என்றழைக்கிறார்கள்.

*இவரை தனரேகை பெருமாள், வாழவைக்கும் பெருமாள் என்கிறார்கள். தனரேகை கரத்தில் பணம் வைத்து எடுத்துச் சென்றால் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாதாம்.

*திருப்பதி மலை வெண் கற்களால் ஆனதுபோலவே சங்காணி மலைக் குன்றும் வெண்கற்களால் ஆனது.

*புரட்டாசி சனிக்கிழமைதோறும் கருடசேவை நடப்பது வழக்கமானதுதான்; ஆனால், பக்தர்கள் விரும்பி கேட்கும் நாட்களில்கூட கருடசேவை நடத்தப்படுகிறது.

*மணி மண்டபத்திற்கு எதிரே மதில் சுவரின் உட்புறம் தென்கிழக்கு மூலையில் தலவிருட்சமான நெல்லி மரம் உள்ளது.

*தெற்குப் பிராகாரத்தில் உள்ள வெண்கலக் கருடன் இருபுறமும் மடித்த இறக்கைகளுடன் கையில் சங்கு – சக்கரத்துடன் அபூர்வமாகக் காணப்படுகிறார்.

*இத்தலத்திற்கு நெல்லை சந்திப்பிலிருந்து டவுன் பஸ் வசதி உள்ளது. ஆட்டோவிலும் செல்லலாம்.

The post திருப்பங்கள் தரும் திருவேங்கடநாதபுரம் appeared first on Dinakaran.

Read Entire Article