திருத்துறைப்பூண்டியில் நகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு

3 weeks ago 6

 

திருத்துறைப்பூண்டி, ஜன.12: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சாமியப்பா நகர் தெரு நல அமைப்பின் சார்பில் நடைபெற்ற சாமியப்பா நகரில் பெயர் பலகை திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. தெரு நல அமைப்பின் தலைவர் நரசிம்மன் தலைமை வகித்தார். துணை தலைவர் பாலு மற்றும் மூத்த உறுப்பினர் சந்திரமோகன் முன்னிலை வகித்தனர், நகர் பெயர் பலகையை வர்த்தக சங்க தலைவர் செந்தில்குமார் திறந்துவைத்தரர். முன்னதாக தெரு நல சங்க செயலாளர் சந்திரசேகரன் மற்றும் இணை செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றனர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ராமலிங்கம், சண்முகம், மருதமுத்து, வேதையன், வேதரெத்தினம், ரவிசங்கர், கணேஷ், கோபு, ரகுராமன், வினோத்ராஜ், அய்யப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிறைவாக பொருளாளர் சம்மந்தம் நன்றியுரை வழங்கினார். இதில் 100க்கும் மேற்பட்ட தெருவாசிகள் கலந்துகொண்டனர். நகராட்சி பணிபுரியும் பணியாளர்களுக்கு பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது.

The post திருத்துறைப்பூண்டியில் நகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Read Entire Article