சென்னை: தொழிலாளர்களுக்கான பிஎஃப் பங்களிப்பு தொகையை 10 ஆண்டுகளாக செலுத்தவில்லை என்பதால் வங்கி கணக்கு முடக்கப்பட்டதை எதிர்த்து திருத்துறைப்பூண்டி நகராட்சி நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், 50 சதவீத தொகையை 4 வார காலத்துக்குள் செலுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளர்களுக்கும் வருங்கால வைப்பு நிதியை பிடித்தம் செய்ய வேண்டுமென மத்திய அரசு கடந்த 2011-ம் ஆண்டு உத்தரவிட்டது. அதன்படி தமிழக நகராட்சி நிர்வாகத்துறையும் இதுதொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.