திருத்தணி முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள்: 2 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்

5 hours ago 3

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மலையில் முருகன் கோவில் உள்ளது. அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். குறிப்பாக விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.

இந்நிலையில், வார விடுமுறை தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ள நிலையில் சுமார் 2 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருத்தணி மட்டுமின்றி திருச்செந்தூர், பழனி உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

Read Entire Article