3-வது மொழியாக தெலுங்கை படிக்கலாம்: முருக பக்தர்கள் மாநாட்டில் நயினார் நாகேந்திரன் பேச்சு

3 hours ago 2

மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. திருப்பரங்குன்றம் மலை, கோவில் பின்னணியில் இருப்பது போன்று இந்த மாநாட்டுக்கு மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மேடையில் அறுபடை வீடுகளின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு நடுவில் முருகப்பெருமான் வேலுடன் நிற்கும் பிரமாண்ட சிலை போன்ற வடிவமைப்பும் இடம் பெற்றுள்ளது.

முருக பக்தர்கள் மாநாட்டில் ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் பங்கேற்றுள்ளார். அவர் வேட்டி, சட்டை மற்றும் பச்சை துண்டு அணிந்து பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் முருக பக்தர்கள் மாநாட்டில் பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், "முருகப்பெருமானின் புகழை பரப்புகின்ற நிகழ்வு இது. உண்மையிலேயே இன்று எல்லாரும் மலைத்துப்போய் இருக்கிறார்கள்.

எத்தனையோ தடங்கல் செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள். தடைக் கற்களை எல்லாம் படிக்கற்களாக மாற்றி இன்று இவ்வளவு பெரிய நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது" என்று கூறினார்.

பின்னர் இந்த மாநாட்டுக்கு ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் வந்துள்ளார் என்று தெலுங்கில் கூறிய நயினார் நாகேந்திரன் மூன்றாவது மொழியாக தெலுங்கை படிக்கலாம் என்று கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

"நயினார் நாகேந்திரன் தெலுங்கில் பேசிவிட்டார் என்று கூறுவார்கள். உங்களை எதாவது ஒரு மொழியைத் தான் படிக்கச் சொல்கிறோம். நம் பக்கத்தில் இருக்கும் தெலுங்கை படிக்கலாம். தமிழ், தெலுங்கு எல்லாம் ஒரே கலாசாரம், பண்பாடு. அதைத்தான் நாம் இணைக்க சொல்கிறோம். மலையாளம் இருக்கிறது, கன்னடம் இருக்கிறது. நம்முடைய கலாசாரம் ஒருமித்த கலாசாரம். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article