திருச்செந்தூர் கோயில் அருகே 60 அடிக்கு உள்வாங்கிய கடல்: பாசிப்படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது

3 days ago 4

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே நேற்று கடல் சுமார் 60 அடிக்கு உள்வாங்கியதால் பாசிப் படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது. அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் முருகன் கோயில் அழகிய கடற்கரையோரம் அமைந்துள்ளது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடுவதை பெரும் பாக்கியமாக கருதுகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அதிகாலை முதல் இரவு வரை உற்சாகமாக நீராடி மகிழ்கின்றனர். இங்கு தமிழ் மாதங்களில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்குவதும், பின்னர் இயல்பு நிலைக்கு திரும்புவதும் வாடிக்கையாகி விட்டது.

இதேபோல நேற்று முன்தினம் (28ம் தேதி) இரவு 7.24 மணி முதல் நேற்று மாலை 5.12 மணி வரை அமாவாசை திதி இருந்தது. இதன் காரணமாக கோயில் கடற்கரையில் அய்யா கோயில் அருகே சுமார் 60 அடி தூரம் கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் பச்சைப்பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது. கடல் அலை உள்வாங்குவதும், வெளியேறுவதுமாக இருந்தபோதிலும் பக்தர்கள் எவ்வித அச்சமின்றி வழக்கம்போல் கடலில் நீராடினர்.

The post திருச்செந்தூர் கோயில் அருகே 60 அடிக்கு உள்வாங்கிய கடல்: பாசிப்படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது appeared first on Dinakaran.

Read Entire Article