திருச்சியில் கடன் தொல்லையால் விபரீத முடிவு: விஷம் கொடுத்து 2 குழந்தைகளை கொன்று ஜவுளிக்கடை அதிபர், மனைவி தற்கொலை

1 day ago 3


திருச்சி: திருச்சியில் கடன் தொல்லை காரணமாக 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு ஜவுளிக்கடை அதிபரும், அவரது மனைவியும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். திருச்சி மேலகல்கண்டார்கோட்டை மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் அலெக்ஸ் (42). இவர் மேலகல்கண்டார்கோட்டை கடைவீதியில் ஜவுளி கடை நடத்தி வந்தார். இவரது மனைவி விக்டோரியா (35). ரயில்வே ஊழியரான இவர் பொன்மலை பணிமனையில் வேலை செய்து வந்தார். இவர்களது மகள்கள் ஆராதனா (9), ஆலியா (3). இவர்கள் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் அலெக்ஸ் குடும்பத்தினர் கடந்த 2 நாட்களாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அவர்களை நேற்று மதியம் உறவினர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். கணவன், மனைவி இருவருமே போனை எடுக்கவில்லை. இதனால் இன்று காலை அந்த உறவினர் அலெக்ஸ் வீட்டுக்கு வந்தார்.

வீட்டு வாசலில் நின்று கூப்பிட்டு பார்த்தும் எந்த சத்தமும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் பொன்மலை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது ஹாலில் விக்டோரியா சேலையில் தூக்கில் தொங்கினார். அறையில் அலெக்ஸ் சேலையில் தூக்கில் தொங்கினார். அலெக்சுக்கு கீழே பாயில் 2 குழந்தைகளும் வாய், மூக்கில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தனர். தொடர்ந்து 2 ஆம்புலன்ஸ்கள் மூலம் 4 சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில், அலெக்ஸ் நடத்தி வந்த ஜவுளி கடையில் நஷ்டம் ஏற்பட்டது. தஞ்சையில் உள்ள அவரது தாய்க்கு புற்றுநோய் இருந்ததால் மருத்துவ செலவுக்கு ரூ.3ல ட்சம் வரை கடன் வாங்கி கொடுத்துள்ளார். மேலும் தனது தம்பிக்கு தொழில் துவங்க ஜாமீன் போட்டு கடன் வாங்கி கொடுத்துள்ளார்.

அவருக்கும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை கட்டவில்ைல. அந்த கடனையும் அலெக்ஸ் கட்டி வந்துள்ளார். இதற்கிடையே மகாலட்சுமி நகரில் வங்கி கடன் வாங்கி சொந்த வீடு வாங்கினார். வீட்டு கடன் தவணையை விக்டோரியாவின் தாய்க்கு வந்த பென்சன் மூலம் கட்டி வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் இறந்துவிட்டார். இதனால் வீட்டுக்கடன், தாய், தம்பிக்கு வாங்கி கொடுத்த கடன்களை இவர்களால் கட்டமுடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதனால் தற்கொலை செய்ய முடிவு செய்து 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருச்சியில் கடன் தொல்லையால் விபரீத முடிவு: விஷம் கொடுத்து 2 குழந்தைகளை கொன்று ஜவுளிக்கடை அதிபர், மனைவி தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article