திருச்சி,பிப்.7: திருச்சி மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் திருமண நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தகவல் தெரிவித்துள்ளார். 2024-2025ம் நிதியாண்டிற்கு 4 வகையான திருமண நிதியுதவி திட்டத்தின்கீழ் திருச்சி மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் திருமண நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார். கை, கால் பாதிக்கப்பட்டோரை நல்ல நிலையில் உள்ளோர் திருமணம் புரியும் திருமண நிதியுதவி திட்டம், பார்வையற்றோரை நல்ல நிலையில் உள்ளோர் திருமணம் புரியும் திருமண நிதியுதவி திட்டம், காது கேளாத மற்றும் வாய் பேசாதோரை நல்ல நிலையில் உள்ளோர் திருமணம் புரியும் திருமண நிதியுதவி திட்டம், மாற்றுத்திறனாளியை மாற்றுத்திறனாளி திருமணம் புரியும் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் நிதியுதவி மற்றும் தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, திருச்சி மாவட்டத்தில் திருமணம் புரிந்த மாற்றுத் திறனாளிகளுக்கு ₹.25,000 மற்றும் 8 கிராம் தங்க நாணயமும், தம்பதியாின் எவரேனும் ஒருவா் பட்ட படிப்பு அல்லது பட்டய படிப்பு படித்தவராக இருந்தால் ₹.50,000 மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திருமண தம்பதியா்களில் இருவருக்கும் முதல் திருமணமாக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் திருமணம் நடைபெற்ற நாளிலிருந்து ஓராண்டுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, ஆதார் அட்டை, திருமண அழைப்பிதழ் மற்றும் திருமண நாளில் எடுக்கப்பட்ட புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம், கணவன் மனைவி இருவாின் ஒருவா் நல்ல நிலையில் உள்ளார் என மருத்துவச் சான்று, குடும்ப அட்டையின் நகல், கல்வி சான்றின் நகல் மற்றும் தம்பதியா் இருவருக்கும் மணமாகவில்லை என்பதற்கான சான்று (இணையதளம் வாயிலாக பெற வேண்டும்) ஆகியவற்றுடன் www.tnesevai.tn.gov.in /citizen/Regitration.aspx என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.
மேலும் விபரங்களுக்கு திருச்சி கண்டோண்மென்ட் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக பின்புறத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் அல்லது 0431-2412590 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
The post திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் திருமண நிதிஉதவிக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.