மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் இன்று சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் மாநாடு

4 hours ago 2

மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் “சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு” இன்று மாலை நடைபெறவுள்ளது.

பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் “சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு” இன்று மாலை நடைபெறவுள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு மாநாடு நடைபெறவுள்ளதால், மாநாட்டுக்காக பிரமாண்ட திடல் தயார் செய்யப்பட்டுள்ளது. 2 லட்சம் பேர் அமரும் வகையில் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, கட்சியின் நிர்வாகிகள், வன்னியர் சங்கம் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர். கலைநிகழ்சிகளுடன் மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. வன்னியர் சங்க கொடியை ராமதாஸ் ஏற்றிய பிறகு, அவர் குறித்த ஆவணப்படம் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. பின்னர், தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. தொடர்ந்து, அன்புமணியும், நிறைவாக ராமதாஸும் உரையாற்றுகின்றனர்.

Read Entire Article