திருச்சி: திருச்சி சரக டிஐஜி வருண்குமார், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடர்ந்த அவதூறு வழக்கு திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4ல் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று காலை விசாரணைக்கு வந்தது. டிஐஜி வருண்குமார் ஆஜரானார். டிஐஜியின் ஆவணங்களுக்கு பதிலளிக்க வேண்டிய சீமான் ஆஜராகவில்லை.
அவருக்கு பதிலாக ஆஜரான வக்கீல், சீமான் மீதான டிஐஜி புகார்களுக்கு மறுப்பு தெரிவித்து எழுத்துப்பூர்வமான அறிக்கை அளித்தார். இதையடுத்து விசாரணையை வரும் மே 8ம் தேதிக்கு ஒத்திவைத்தும், அன்றைய தினம் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி விஜயா உத்தரவிட்டார்.
The post திருச்சி கோர்ட்டில் மே 8ல் சீமான் ஆஜராக உத்தரவு appeared first on Dinakaran.