திருக்காட்டுப்பள்ளி, பிப். 25: திருக்காட்டுப்பள்ளி அருகே ஆற்றில் சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருக்காட்டுப்பள்ளி – கண்டியூர் சாலையில் பாம்பாலம்மன் கோயில் அருகில் உள்ள குடமுருட்டி ஆற்றில் மின்கம்பம் நடப்பட்டு உயர் மின்னழுத்த பாதை ஆற்றை கடந்து செல்கிறது. இந்நிலையில், நீண்ட நாட்களாக அந்த மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில், ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, உடனடியாக போர்க்கால அடிப்படையில் அந்த மின் கம்பங்களை சரி செய்து, விபத்தை தவிர்க மின்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post திருக்காட்டுப்பள்ளி குடமுருட்டி ஆற்றில் ஆபத்தான நிலையில் மின்கம்பங்கள் appeared first on Dinakaran.