தியேட்டரில் பெண் பலியான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு நீதிமன்றம் ஜாமீன்

4 months ago 12

திருமலை: புஷ்பா 2 திரைப்படத்தின் பிரிமியம் காட்சி வெளியான கடந்த டிசம்பர் மாதம் 4ம் தேதி அன்று ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் நடைபெற்ற சிறப்புக் காட்சியில் கலந்து கொள்ள அல்லு அர்ஜூன் சென்றிருந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் மரணமடைந்த நிலையில், அவருடைய மகன் மயங்கி விழுந்து மூளை செயலிழந்து தற்போதும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த ஐதராபாத்தில் உள்ள சிக்கடப்பள்ளி காவல் நிலைய போலீசார் அல்லு அர்ஜூனையை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை விசாரித்த ஐதராபாத் உயர் நீதிமன்றம் அல்லு அர்ஜூனுக்கு இந்த மாதம் 10ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில் ஜாமீன் வழங்க கோரி அல்லு அர்ஜூன் சார்பில், அவருடைய வக்கீல்கள் ஐதராபாத்தில் உள்ள நாம்பள்ளி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று அந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் அவருக்கு வழக்கமான ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

The post தியேட்டரில் பெண் பலியான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு நீதிமன்றம் ஜாமீன் appeared first on Dinakaran.

Read Entire Article