“திமுகவுக்கு அடிமை சாசனம் எழுதப்பட்டது போல விசிக இருக்கிறது” - ஜெயக்குமார் விமர்சனம்

2 hours ago 1

சென்னை: “வேங்கைவயல் சம்பவத்தில், இந்த அரசைப் பொறுத்தவரை மிகப் பெரிய பின்னடைவு. வேங்கைவயலுக்கு சுதந்திரமாக செல்ல யாரையும் இந்த அரசு அனுமதிப்பதில்லை. விசிகவைச் சேர்ந்தவர் பேசுவார். ஆனால், கொத்தடிமை சாசனம் எழுதப்பட்டது போல, திமுகவுக்கு அடிமை சாசனம் எழுதப்பட்டது போல அங்கேயேதான் இருப்பார்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று (பிப்.3) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “அண்ணா பல்கலை.யில் நடந்த பாலியல் வன்கொடுமை, ஈசிஆர் சாலையில் பெண்கள் சென்ற காரை சேஸ் செய்து, அதனால் பெண்கள் எழுப்பிய குரல் எல்லாம் பார்த்து, நாடே சிரிக்கிறது. அது ஆர்.எஸ்.பாரதிக்கு கேட்கவில்லை. இசிஆர் விவகாரத்தில் காவல் துறை முதலில் ஒரு தகவலையும், அழுத்தத்தின் காரணமாக இன்னொரு விளக்கமும் கொடுக்கின்றனர்.

Read Entire Article