சென்னை: திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சிண்டு முடியும் வேலை எடுபடாது. முருக பக்தர்கள் மாநாடுபோல சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக - பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. வரலாறு காணாத வகையில் வெற்றி பெற்றதை பொறுத்துக்கொள்ள முடியாத திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும், மாநாட்டில் ஒளிபரப்பப்பட்ட 3 நிமிட வீடியோ காட்சிகளை வைத்து அதிமுக - பாஜக இடையே சிண்டு முடியும் வேலையில் இறங்கியுள்ளனர்.