சென்னை: தீவிரவாதிகளின் ஊடுருவலை முறியடிக்கும் வகையில், தமிழக கடலோர மாவட்டங்களில் சாகர் கவாச் என்ற பெயரில் தொட்கிய 36 மணி நேர பாதுகாப்பு ஒத்திகை, இன்று மாலையில் நிறைவடைகிறது.
தமிழகத்தில் உள்ள 14 கடலோர மாவட்டங்களில் காவல்துறையின் சார்பில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நேற்று காலை 6 மணிக்கு தொடங்கியது. இதில், தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, கடலோர காவல் படை, குற்றப் பிரிவு போலீஸார் என அனைத்து பாதுகாப்புப் பிரிவினரும் பங்கேற்றனர்.