திமுக அரசின் ஏமாற்று வேலையால் விடுமுறை நாளில் கூட போராட்டக் களத்தில் நிற்கும் அரசு ஊழியர்கள்: விஜய் குற்றச்சாட்டு

1 month ago 6

திமுக அரசின் கபட நாடக ஏமாற்று வேலையால் விடுமுறை நாளில் கூட போராட்டக் களத்தில் நின்று அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர் என தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், உயர்கல்வி சார்ந்த ஊக்க ஊதிய உயர்வு, முடக்கி வைக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்படைப்பு, ஊதிய முரண்பாடுகளைக் களைதல் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் மூலம் நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர்.

Read Entire Article