கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க பச்சை பட்டுடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்

2 days ago 3

மதுரை: கோவிந்தா கோவிந்தா’ முழக்கம் விண்ணை முட்ட பக்தர்கள் புடைசூழ தங்கக் குதிரை வாகனத்தில், பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். இன்று அதிகாலை 6 மணி அளவில் மதுரை – ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் எழுந்தருளினார். இந்த நிகழ்வின்போது லட்சக்கணக்கான மக்கள் கள்ளழகரை தரிசித்து வழிபட்டனர்.

மதுரை அழகர்​கோ​வில் கள்​ளழகர் கோயில் சித்​திரைத் திரு​விழா மே 8-ல் தொடங்கியது. முதல் நாள், இரண்​டாம் நாள் மாலை​யில் சுந்​தர​ராஜ பெரு​மாள் தோளுக்​கினி​யானில் எழுந்​தருளி​னார். மூன்​றாம் நாளான நேற்று முன்​தினம் காலை​யில் தோளுக்கினியானில் சுந்​தர​ராஜபெரு​மாள்திருக்​கல்​யாண மண்​டபத்​தில் எழுந்​தருளி​னார்.

பின்​னர் கண்​டாங்கி பட்டு உடுத்​தி,நெற்​றிப்​பட்​டை, கரங்​களில்வளைத்​தடி, நேரிக்​கம்பு பரி​வாரங்​களடன் மண்​டூக முனிவருக்கு சாப​விமோசனம் அளிக்க கள்​ளழகர் திருக்​கோலத்​தில் தங்​கப்பல்​லக்​கில் மதுரைக்​குப் புறப்​பட்​டார். விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று அதிகாலை சித்திரா பவுர்ணமி நாளில் ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர். காலை 7.25 மணி​யள​வில் வையாளி​யாகி வீர​ராகவப் பெரு​மாளுக்கு மாலை சாற்​றி​விட்டு அங்​கிருந்து ராம​ராயர் மண்​டகப்​படிக்கு புறப்​படு​கிறார்.

அங்கு பக்​தர்​கள் தண்​ணீர் பீய்ச்சி அடித்து கள்​ளழகரை குளிர்விக்​கின்​றனர். இரவில் வண்​டியூர் வீர​ராகவப் பெரு​மாள் கோயி​லில் தங்​கு​கிறார். நாளை மே 13-ல் தேனூர் மண்​டகப்​படி​யில் மண்​டூக முனிவருக்கு சாப​விமோசனம் அளிக்​கிறார். அன்​றிரவு ராம​ராயர் மண்​டபத்​தில் விடிய விடிய தசாவ​தா​ரம் நடை​பெறும்.

முன்னதாக, வழிநெடுகிலும் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளினார் என்பது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் ஆடிப்பாடி அழகரை வழிபட்டனர். சித்​திரைத் திரு​விழாவை முன்​னிட்டு மதுரை மாநகரம் விழாக்​கோலம் பூண்​டுள்​ளது. பக்​தர்​கள் கூட்​டம் கூட்​ட​மாக மதுரை மாநகரை நோக்கி வந்த வண்​ணம் உள்​ளனர்.

The post கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க பச்சை பட்டுடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர் appeared first on Dinakaran.

Read Entire Article