மார்த்தாண்டம், மார்ச் 12: விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட பாகோடு பேரூராட்சி திக்குறிச்சி பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் 2 கணினிகள் மற்றும் ஒரு பிரிண்டரை தாரகை கத்பர்ட் எம்எல்ஏ மாணவர்களின் பயன்பாட்டுக்காக வழங்கினார். அதேபோல் பாகோடு பேரூராட்சியில், கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்த பேரைக்குழிவிளை சாலையை தாரகை கத்பர்ட் எம்எல்ஏ திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் வட்டாரத் தலைவர் மோகன்தாஸ், வார்டு கவுன்சிலர்கள் மது, ஷர்மிளா, மேல்புறம் சேவாதள வட்டார தலைவர் ஷாஜி, தர்மலிங்கம், சசி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
The post திக்குறிச்சி அரசு தொடக்க பள்ளிக்கு கம்ப்யூட்டர் appeared first on Dinakaran.