
தாம்பரம்,
தாம்பரம் - விழுப்புரம் பயணிகள் ரெயில் இன்று மேல்மருவத்தூர் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலக்கூர் - திண்டிவனம் இடையே பராமரிப்பு பணி நடப்பதால் தாம்பரத்தில் இருந்து விழுப்புரத்திற்கு 9.45 மணிக்கு புறப்படும் ரெயில் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மறுமார்க்கத்தில் விழுப்புரத்துக்கு பதில் மேல்மருவத்தூரில் இருந்து இன்று பிற்பகல் 1.40 மணிக்கு இந்த ரெயில் சென்னை புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.