தாம்பரத்தில் நடைமேம்பால பணியால் மின்சார ரயில் சேவை ரத்து: பேருந்தில் செல்வதற்காக மக்கள் கூடியதால் நெரிசல்

4 months ago 9

சென்னை / தாம்பரம்: ​தாம்​பரத்​தில் நடைமேம்​பாலப் பணி காரண​மாக, மின்சார ரயில்கள் நேற்று காலை முதல் மாலைவரை ரத்து செய்​யப்​பட்​டது. இதனால், பயணிகள் கடும் அவதிப்​பட்​டனர். சென்னை எழும்​பூர் - விழுப்புரம் மார்க்​கத்​தில் தாம்​பரம் யார்டில், புதிய நடைமேம்பால பணி காரண​மாக, சென்னை கடற்கரை - செங்​கல்​பட்டு வழித்​தடத்​தில் மின்சார ரயில் சேவை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரைரத்து செய்​யப்​படும் என தெற்கு ரயில்வே நேற்று முன்​தினம் அறிவித்​தது.

மேலும், சென்னை கடற்கரை - பல்லா​வரம், கூடு​வாஞ்​சேரி - செங்​கல்​பட்டு இடையே இருமார்க்​க​மாக​வும் சிறப்பு ரயில்கள் இயக்​கப்​படும் என தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது. அதன்​படி, நேற்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையில் கூடு​வாஞ்​சேரி - பல்லா​வரம் இடையே மின்சார ரயில்கள் முழு​வதுமாக ரத்து செய்​யப்​பட்​டன.

Read Entire Article