சென்னை: நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. மின்தடையால் பாதிக்கப்பட்ட நீட் தேர்வு மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரிய வழக்கில் உத்தரவிடப்பட்டது. மின் தடை பிரச்சினை தொடர்பாக நீட் தேர்வு முடிவுகளை வெளியிட ம.பி.ஐகோர்ட் ஏற்கனவே தடை விதித்துள்ளது.
The post நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.