தவறான தகவல் தாக்கல் செய்த விவகாரம்: கே.சி.வீரமணி திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்

4 months ago 16

திருப்பத்தூர்: தமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது உண்மைக்குப் புறம்பான தகவல்களை தாக்கல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி திருப்பத்தூர் நீதிமன்றத்தில் இன்று (டிச.17) ஆஜரானார். இதையடுத்து, வழக்கு விசாரணை அடுத்த மாதம் 6-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி போட்டியிட்டார். அப்போது தேர்தல் ஆணையத்தில் அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அவர் தனது சொத்து விவரங்களை குறைத்து, தவறான தகவல்களை கொடுத்திருப்பதாக சர்ச்சை எழுந்தது.

Read Entire Article