சென்னை: தலைநகர் டெல்லியைபோல 2026-ல் தமிழகத்தில் தாமரை மலரும் என தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்றதை தொடர்ந்து, சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில், முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.