தலசயன பெருமாள் கோயில் தெப்ப உற்சவ கமிட்டி ஆலோசனை கூட்டம்

2 months ago 10

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் மாசி மாத பவுர்ணமி அன்று தலசயன பெருமாள் கோயில் குளத்தில் தெப்ப உற்சவமும், மறுநாள் கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம். அதேபோல், இந்தாண்டு வரும் மார்ச் 13ம் தேதி இரவு பவுர்ணமியை முன்னிட்டு கடற்கரை கோயில் செல்லும் வழியில் உள்ள புண்டரீக புஷ்கரணி குளத்தில் தெப்ப உற்சவமும், மறுநாள் மார்ச் 14ம் தேதி காலை கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இந்நிலையில், நிகழ்ச்சிக்கு எந்த மாதிரியான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பது குறித்து மாமல்லபுரம் வியாபாரிகள் தெப்ப உற்சவ கமிட்டி ஆலோசனை கூட்டம் தலசயன பெருமாள் கோயில் மண்டபத்தில் நடந்தது. கூட்டத்தில், தெப்ப உற்சவத்தை கடந்த ஆண்டை விட சிறப்பான முறையில் நடத்த வேண்டும். பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் போஸ்டர்கள் ஒட்ட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

The post தலசயன பெருமாள் கோயில் தெப்ப உற்சவ கமிட்டி ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article